புதுக்குடியிருப்பு, கைவேலி மருதமடு குளத்திற்கு குளிக்கச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் ஒரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2ம் வட்டாரம், கைவேலி புதுக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்து வருபவருமாகிய யோகேஸ்வரன் முரளிதரன் (வயது-32) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

